நாராயணி சுப்ரமணியனின், ‘சூழலும் பெண்களும்’ பல்வேறு கோணங்களில் பெண்களுக்கும் சுற்றுச் சூழலுக்குமான உறவை உற்றுப் பார்த்து இதுவரை நம் கவனத்தை ஈர்த்திராத செய்திகளையும் உணர்வுகளையும் தொகுத்துத் தருகிறது. சமீப காலங்களில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய ஓர் அவசர கதி ஏற்பட்டிருக்கிறது என்று இளைய தலைமுறை களம் இறங்கிச் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. இந்தப் பூமியின் எதிர்காலமே அவர்களின் கரங்களிலேதான் அடங்கியுள்ளது என்கிற விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.
க்ரெட்டா துன்பர்கின் துணிச்சலான உணர்வுபூர்வமான சூழல் பாதுகாப்பு சார்ந்த முன்னெடுப்புகளை நாராயணி பகிர்ந்து கொள்ளும்போது நமக்கும் ஒரு பெருமிதம் ஏற்படுகிறது. சமூக நீதியின் மீதான கரிசனம் கடுகளவும் இல்லாத ‘மனசாட்சி’களை உலுக்கி எழுப்பும் பணியை நாராயணியின், ‘சூழலும் பெண்களும்’ மிக அழுத்தமாகவே செய்திருக்கிறது.
– பேராசிரியர் பாத்திமா பாபு

Reviews
Clear filtersThere are no reviews yet.