ஒரு பெண் தேவதாசியாவதென்பது வரம் என்று சொல்லப் பட்டாலும், அது வரமல்ல சாபம் என்பதை ‘உத்தரா’ நாவலின் வழியே மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் கதாசிரியர்.
மனதைப் பிழிகிற சோகம் நாவல் முழுக்கவே இழையோடினாலும், இந்தியச் சமூகத்தில் நிலவிய ஒரு கொடூரமான பழக்கத்தைப் பற்றி, அதன் துயரம் சூழும் வலியினைப் பற்றி மிக எதார்த்தமாக எழுதியுள்ள அனிதா தாஸ் நம் பாராட்டுக்குரியவராகிறார். அவ்வாறே, மொழிபெயர்ப்பு எனும் உணர்வு எந்த இடத்திலும் துருத்திக் கொண்டிராமல், தமிழ் நாவலொன்றினைப் படிப்பது போல் சரளமான நடையில் எழுதியுள்ள மு.ந.புகழேந்தியையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.
மு.முருகேஷ்
முதுநிலை உதவி ஆசிரியர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்.

Reviews
Clear filtersThere are no reviews yet.