நேர்த்தியாகவும், உணர்வுபூர்வமாகவும் திரைக்கதை அமைப்பதில் வல்லவரான இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள், ஒரு கரு எப்படி கதையாகி, திரைக்கதையாகி, திரைப்படமாகிறது என்பதை கற்றுக் கொடுத்ததில், இந்திய சினிமாவையையே இன்றளவும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளவர். தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். அப்படியென்றால், மதிப்பிடமுடியாத பொக்கிஷங்கள் வைத்து பூட்டப்பட்ட அறைக்கான சாவி இப்போது உங்களுக்கு கிடைத்துவிட்டது. மூன்றுமணி நேரத்தில் முன்னூறு இயக்குநர்களிடம் பணியாற்றிய அனுபவத்தோடு, ஒரு திரைப்படம் பார்த்து முடிக்கும் நேரத்தில், ஒட்டு மொத்த திரைப்படத்திற்கான சூட்சுமங்களையும் தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். வெற்றி தோல்விகளிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ரகசியங்கள், கற்க வேண்டிய பாடங்கள் என பகிரங்கமாக உடைத்து காட்டப்பட்டுள்ளது.
வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் அனுபவசாலிகளான இளைய தலைமுறை இயக்குநர்கள் மட்டுமல்லாது, திரைப்படத்துறையை நோக்கிவரும் புதிய இளைஞர்களையும் ஒருங்கிணைத்தே தன் உரையாடலைத் துவங்குகிறது ”வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்” என்ற இந்நூல்.
– மு. வேடியப்பன்

Reviews
Clear filtersThere are no reviews yet.