பிறந்தது ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி கிராமம். பெற்றோர் வேலுச்சாமித் தேவர் லக்ஷ்மி அம்மாள்
கல்லூரிப் படிப்போடு ராணுவத்துக்குப் போனவர். துப்பாக்கி தூக்கிச் சுடும்போதும் வனங்களின் பூ நோகாமல் குறிவைத்தவர். பிறந்த மண்ணில் சிந்திச் சிதறிக் கிடக்கும் மனுசப்பாடுகளை இலக்கியம் ஆக்கியவர். மண்சார்ந்த வல்லமைமிக்க, தனித்த ஓர் எழுத்துப் பாணியை தனதாக்கிய வேல ராமமூர்த்தி, பல்லாயிரம் பேரையும் இமைக்கமறந்து கேட்கவைக்கும் ‘மேடைக் கதைசொல்லி’. பல்கலைக்கழகப் பாடங்களாகவும் முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுக் களஞ்சியமாகவுமான இவரது கதைகள், அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், பிரெஞ்ச், மலாய், கொரியன் மற்றும் சீன மொழிகளிலும் ஆக்கம் செய்யப்பட்டுள்ளன.
பல ஆண்டுகள் இந்திய அஞ்சல் துறைக்குள் அடைப்பட்டிருந்த இந்த ராணுவக் குதிரை கட்டுடைத்து வெளியேறி, மதயானையாக… கொம்பனாக… பாயும்புலியாக… சேதுபதியாக… தமிழ்த் திரைப்படத்துறையில் வலம்வரத் தொடங்கியுள்ளது.
– மு.வேடியப்பன், பதிப்பாளர்
வேல ராமமூர்த்தி கதைகள்
Author : வேல ராமமூர்த்தி
Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்
Language : தமிழ்
Category : சிறுகதைகள்
ISBN : 9789386555809
Published on : 2024
Book Format : Paperback
₹320.00
Description
Customer Reviews
Rated 0 out of 5
0 reviews
Rated 5 out of 5
0
Rated 4 out of 5
0
Rated 3 out of 5
0
Rated 2 out of 5
0
Rated 1 out of 5
0
Be the first to review “வேல ராமமூர்த்தி கதைகள்” Cancel reply

Reviews
Clear filtersThere are no reviews yet.